மட்டக்களப்பில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல்..................

 மட்டக்களப்பில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல்..................

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) திகதி இடம் பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில் உதித்த உறுமய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் காணி உரிமம் அற்ற மக்களிற்கு பூரண உரித்து அளிப்பு வழங்கள் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு கனனி மற்றும் ஸ்கனர் இயந்திரங்கள் அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தனியார் காணி உறுதி பத்திரங்களுக்கு சமமான பூரண காணி உரிமம் மக்களுக்கு வழங்கும் செயற்பாடு மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Comments