மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் 149 ஆண்டை சிறப்பிக்கும் முகமாக விளையாட்டு நிகழ்வு..............

 மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் 149 ஆண்டை சிறப்பிக்கும் முகமாக விளையாட்டு நிகழ்வு..............

(நிரோசன்) மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின் 2024 ஆண்டில் தமது 149 ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக (13)  இந்துகல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது, மட்டக்களப்பில் மகாஜன கல்லூரி வரலாற்றுப்பதிவு செய்த ஸ்தாபகர் ஜோன் ஹில்னக் அடிகளாரினால் 1875 ஆனி 29 திகதி பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று 149 ஆண்டுகளாக நிறைவடைந்தது அதை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் அதிபர் எஸ். சாந்தகுமார் தலைமையில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர்  ராஜகுமாரி கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, கரைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் போட்டிகள் இடம் மற்றும் பழைய மாணவர்களின் நடனங்கள், தெரு நாடகம்  ஆகியனவும் அனைவரதும் கவனத்தை ஈர்த்தன.

அதோடு பாடசாலை பழைய மாணவர்களால் பாடசாலையினால் நலன் கருதி மாணவர்களினால் சேமிக்கப்பட்ட பணம் பாடசாலை அதிபரிடம்  வழங்கி வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








Comments