அரச ஊழியர்களுக்கான, சமுர்த்தி லக்சர வழங்கும் திட்டம்..............

 அரச ஊழியர்களுக்கான, சமுர்த்தி லக்சர  வழங்கும் திட்டம்..............

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி லக்சர கடன் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதரின் வழிகாட்டலில் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் கடன் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் ரசீதா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடன் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் தொடக்கம் 10 லட்சம் ரூபா வரை அரச உத்தியோகத்தர்கள் சமுர்த்தி வங்கிகளில் இந்தக் கடனை பெற்றுக் கொள்ள முடியும்.

Comments