மட்டக்களப்பில் இளைஞர்களால் சிரமதானப் பணியொன்று முன்னெடுப்பு.......

 மட்டக்களப்பில் இளைஞர்களால் சிரமதானப் பணியொன்று முன்னெடுப்பு.......

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து, 'பொலித்தீன் அற்ற எமது நகரம்' எனும் கருப்பொருளில் சிரமதானப் பணி ஒன்றை  முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சஜிவ் தலைமையில் இடம் பெற்ற சிரமதான நிகழ்வில், மட்டக்களப்பு பிள்ளையாரடி யில் இருந்து தன்னாமுனை வரை பிரதான நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் இளைஞர் யுவதிகளால் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து இளைஞர் கழகங்கள் சார்பாக இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்றனர்.

மாவட்ட இளைஞர் கழக சம்மேளன உதவிப் பணப்பாளர் நிசாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தார்கள் எம். சசிகுமார், சதீஸ்வரி கிருபாகன், இளைஞர் சேவை உத்தியோர்தர் ரம்ஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments