ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க காணியில் மதில் அமைப்பதற்கு இரா சாணக்கியன் அவர்களால் அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது..............

 ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க காணியில் மதில் அமைப்பதற்கு  இரா சாணக்கியன் அவர்களால் அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது..............

மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்துக்குரிய காணியில்  மதில் அமைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இரா. சாணக்கியன்  அவர்களால்  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டிருந்தது, அந்த வகையில்  2024.06.23ஆம் தேதி அடிக்கல் நாட்டும்  நிகழ்வு இடம்பெற்றது அடிக்கல்லினை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  இரா சாணக்கியன்  அவர்கள் நட்டு  வைத்தார்.

இந்நிகழ்வில்  அவரது செயலாளர் மதி மேனன், ஒருங்கிணைப்பு செயலாளர் தினேஷ் குமார், ஆறாம் வட்டாரத் தலைவர் பிரதீப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர், மேலும் ஜெயந்திபுர  கிராம உத்தியோகத்தர், பொருளாதார  அபிவிருத்தி  உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச போலீஸ் உத்தியோகத்தர்   ஆகியோரும்  கலந்து கொண்டார்கள்.

 ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி  சங்கத்தலைவர் தலைவர் முகுந்தன் அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கிராம அபிவிருத்தி  சங்க உறுப்பினர்கள்,  மாதர் கிராமஅபிவிருத்தி  சங்க உறுப்பினர்கள்,   முழுமதி சகவாழ்வு  சங்க உறுப்பினர்கள்,   ஜெயந்திபுரம் சிரேஷ்ட  பிரஜைகள்   சங்க உறுப்பினர்கள்,  முழுமதி விளையாட்டுகழக  உறுப்பினர்கள்,  முழுமதி  இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு  ஸ்ரீ குமாரத்தன்  ஆலய தலைவர், உபதலைவர், பொருளாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.








Comments