சர்வதேச புகைத்தல் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும்வீதி நாடகநிகழ்வு...........

 சர்வதேச புகைத்தல் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும்வீதி நாடகநிகழ்வு...........

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த புகைத்தல் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் (12) புதன்கிழமை இடம்பெற்றது.

'நண்பா போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்' 'வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் மகிழூர்முனை சக்தி வித்தியாலய முன்றலில் ஆரம்பமான பேரணியில் புகைத்தல் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதக விளைவுகளை குறிக்கும் பதாதைகளை ஏந்தி கோசங்களையெழுப்பிய வண்ணம் மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தை அடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் அவர்களின் நெறியாற்கையில் 'ஆடல் நிலம்' வழங்கிய 'விரல் இடுக்கில் கசியும் உயிர்' எனும் தலைப்பிலான புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு  வீதி நாடகமானது கலந்து கொண்டோர் அனைவரினதும் வரவேற்பை பெற்றது.

இந்த பேரணி மற்றும் வீதி நாடக நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் குறித்த வீதி நாடகமானது பிரதேச செயலக முன்றலிலும் இடம்பெற்றதுடன், இதில் பங்குகொண்ட மாணவர்களுக்கு  சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










Comments