ஒ.கே.குணநாதன் எழுதிய 'அமிர்தகழி மண்ணும்மட்டிக்களி ஆறு' நாவல் வெளியீடு...........

ஒ.கே.குணநாதன் எழுதிய 'அமிர்தகழி மண்ணும்மட்டிக்களி ஆறு' நாவல் வெளியீடு...........

குழந்தை எழுத்தாளர் ஒ.கே.குணநாதன் எழுதிய 'அமிர்தகழி மண்ணும் மட்டிக்களி ஆறு' எனும் நாவல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மண்டபத்தில்  நடைபெற்றது.

கூத்துக் கலைஞர் ஒ.கணபதிப்பிள்ளையின் 100ஆவது பிறந்த தின நிகழ்வாக, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தமிழறிஞர் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம் பெற்ற நாவல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதிகளாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், வைத்திய நிபுணர் பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய குருவின் ஆசியுடன் வரவேற்புரை, தலைமையுரை புத்தக அறிமுகவுரையை தொடர்ந்து புத்தக அறிமுகம் மற்றும் விமர்சனமும்; இடம்பெற்றது. அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்குமாரினால் எழுத்தாளர் குணநாதனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Comments