மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் சமுதாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் ...............

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் சமுதாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் ...............

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர் கே.பகீரதன் அவர்களின்  ஒழுங்கமைப்பில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சு.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட  பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்   கலந்து கொண்டனர். 

பிரதேச மட்ட தலைவர்களின் அறிமுக நிகழ்வும் இடம் பெற்றதோடு, இவ் ஆண்டுக்கான முன்னேற்ற ஆய்வு, மற்றும் மீளாய்வு, கலந்துரையாடல்களும்  நடை பெற்றன.

இதன் போது  பிரதேச சமுதாய அமைப்பின் தலைவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ்  கலந்து கொண்டார்.












Comments