மட்டக்களப்பபில் புதிய நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி ................

 மட்டக்களப்பபில் புதிய நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி ................

 மட்டக்களப்பு  பழைய  மாவட்ட செயலகத்தில்  புதிதாக நியமனம் பெற்ற 82 கிராம உத்தியோகத்தர்களுக்கான, பயிற்சிநெறி வேலைத்திட்டம் ஜீன் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெற்று முடிவு பெறவுள்ளது.

இதன் போது புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்கள் எவ்வாறான விடயங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது தொடர்பிலான  செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இதன் அடிப்படையில்   (25) அன்று  காணி தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வின்  வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்களால் காணி தொடர்பான விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments