தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப் பிள்ளையாருக்கான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் (2024.06.03) இடம்பெறவுள்ளது..............

 தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப் பிள்ளையாருக்கான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும்  (2024.06.03) இடம்பெறவுள்ளது..............

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமையப் பெற்றுள்ள தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப் பிள்ளையாருக்கான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் திங்கட்கிழமை (03) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (30), வெள்ளிக்கிழமை (31) கிரியைகள் இடம்பெற்று, சனிக்கிழமை (01), ஞாயிற்றுக்கிழமை (02) ஆகிய இரு நாட்கள் எண்ணெக்காப்பு சாத்தும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (03) கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

குறித்த காலங்களில் விசேட பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், அடியார்களுக்கு ஆலய அன்னதான சபையினரால் அன்னதான ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.


Comments