இராஜாங்க அமைச்சரினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.............

 இராஜாங்க அமைச்சரினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.............

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ சந்திரகாந்தன் பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மாநாட்டு மண்டபத்தில் (06) திகதி வழங்கி வைத்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள களுதாவளை மகா வித்தியாலயம், தேற்றத்தீவு மகா வித்தியாலயம் குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்வதற்கு இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட மற்றும் மாகாண மட்டத்தில் பல வருடங்களாக தமது திறமைகளை நிறுபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரதேச மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் எனவும் எதிர்கால சந்ததியின் உடல் உள ஆரோக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற துறையினை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டியது எமது கடமை என தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் மட்டுமல்லாது யுவதிகளையும் விளையாட்டு துறையில் திறமையினை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் தடை தாண்டல் ஓட்டப் போட்டிக்கான உபகரணங்கள், பரிதி வட்டம், ஈட்டிகள், கூடைப்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) ரி.இதயகுமார், பாடசாலைகளின் அதிபர்கள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் த.தஜிவரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோதர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments