முதல் தடவையாக மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களை சந்தித்த புதிய சமுர்த்தி பணிப்பாளர்...........

 முதல் தடவையாக மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களை சந்தித்த புதிய சமுர்த்தி பணிப்பாளர்...........

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக (01) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்கள் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முதல் தடவையாக சந்தித்து கலந்துரையாடியார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்அறிமுக கூட்டத்தில், புதிய சமுர்த்தி பணிப்பாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு மாவட்ட செயலக பிரதம கணக்காளரும்,  சமுர்த்தி பிரிவின் கணக்காளருமான M.S.பஸீர் அவர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த புதிய பணிப்பாளர் அவர்கள் கடந்த காலங்களில் தங்களுடன் பணியாற்றிய பணிப்பாளர்களுக்கு எவ்வாறு தங்கள் சேவையை வழங்கினீர்களோ அதே போன்று தங்களது சேவை சிறப்பாக நடைபெற வேண்டும் என்றார்.





  


Comments