யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு இளைஞன் சடலமாக மீட்பு.............

 யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு இளைஞன் சடலமாக மீட்பு.............

   யாழ் கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.

 மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல்போன நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகின்றது.  

Comments