மட்டக்களப்பு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பால் இரத்தான முகாம் நடாத்தப்பட்டது........

 மட்டக்களப்பு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பால் இரத்தான முகாம் நடாத்தப்பட்டது........

மட்டக்களப்பு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த தான வங்கிக்கு வழங்குவதற்காக இரத்ததான முகாமொன்று நடாத்தப்பட்டது.

அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஜாபீர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டொக்டர் அலீமா அப்துர் ரஹ்மான் உட்பட பலரும் இரத்தான முகாமில் பங்கேற்றனர்.

இரத்ததானம் செய்தவர்களுக்கு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.


Comments