இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் இரத்ததான முகாம்......

 இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் இரத்ததான முகாம்......

மட்டக்களப்பு  இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர் நடாத்திய இரத்ததான முகாம்  (03)ம் திகதி இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு இருதயபுரம் ஆலயப் பங்குத் தந்தை அருட்பணி அன்டனி ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் றேச்சல், தாதியர் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது இருதயபுரம் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள்,  மற்றும் இருதயபுரம் பங்கு மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.

இவ்இரத்ததான முகாம் கடந்த 15 வருட காலமாக இவ் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Comments