மட்டக்களப்பில் வாழைநார் பிரித்தெடுக்கும் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.............

 மட்டக்களப்பில் வாழைநார் பிரித்தெடுக்கும் நிலையமொன்று  திறந்து வைக்கப்பட்டது.............

மட்டக்களப்பில் பிளாஸ்ரிக் பாவனையை குறைக்கும் வகையில், பிளாஸ்ரிக் பொருட்களுக்கு மாற்றீடாக வாழை நாரினாலான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக வாழைநார் பிரித்தெடுக்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம், சி.பி.எம் நிறுவன நிதி அனுசரணையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் இணைந்து பிளாஸ்ரிக் மாற்றிட்டுப் பொருள் உற்பத்திற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவன தலைவர் தர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

வை.எம்.சி.ஏ நிறுவன பதில் பொது செயலாளர் பெற்றிக், மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வை.எம்.சி.ஏ நிறுவன உத்தியோகத்தர்கள், சி.பி.எம் நிறுவன பிரதிநிதிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments