25 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு...........

25 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு...........

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் முப்பெரும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்றது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தடியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பீடம் அடங்கலாக 25.05 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை (31) திகதி திரை நீக்கம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் பொது விழாவும் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் கலந்து சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர்களான கே.கருணாகரன், கலாமதி பத்மராஜா, கே.விமலநாதன் உள்ளிட்ட மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் உதவி முகாமையாளர் சுவாமி சுரார்ச்சிதானந்த ஜீ மஹராஜ், கல்வி திணைக்கள அதிகாரிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மாவட்டத்தில் உள்ள திணைக்கள உயர் அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.










Comments