காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அன்னையின் கரங்கள் அமைப்பினால் சாதனையாளர் பாராட்டு விழா..............

 காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அன்னையின் கரங்கள் அமைப்பினால் சாதனையாளர் பாராட்டு விழா..............

மட்டக்களப்பு - பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அன்னையின் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர் பாராட்டு விழா (29) திகதி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் வே.குணாளன் தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) ரீ.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.அருள்ராசா மற்றும் ஆலயக்குருமார், காக்காச்சிவட்டை கிராம பொது அமைப்புகளின் பிரிதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது முதல் நிகழ்வாக அதிதிகள் பாடசாலை முன்றலில் இருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், சிவத்திரு மகேஸ்வரன் குருக்களின் ஆசிரியுரை என்பன இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அதிதிகள் உரை நிகழ்த்தப்பட்டு, சிறார்களின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தரம் 05 மாணவர்களில் புலமை பரிசில் பரிட்சை சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.சாதாரண தரம், உயர் தரம் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர், பட்டப்படிப்பு நிறைவுசெய்தோர் மற்றும் கல்வியற்கல்விக்கு தெரிவுசெய்யப்பட்டோர் போன்றவர்களுக்கு அன்னையின் கரங்கள் அமைப்பினால் பதக்கங்கள், வாழ்த்து மடல்கள் போன்றன வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.


Comments