மட்டக்களப்பில்தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு......

  மட்டக்களப்பில்தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு......

இலங்கையில் 76வது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் பயன் தரும் மூலிகை மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (02) திகதி குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
"புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பயன்தரு மரக்கன்றுகளை நடும் செயற்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் பிரதான நிகழ்வு இன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எம்.பஸிர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






Comments