மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு கலந்துரையாடல்.............

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு கலந்துரையாடல்.............

மட்டக்களப்பு மாவட்டதின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் முதலாம் காலாண்டிற்க்கான கலந்துரையாடல் (08) பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது உள்ளகக் கணக்காய்வு அறிக்கை, பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரைகளும் முன்னேற்றங்களும், நிதி ரீதியான முன்னேற்றங்கள் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாகிர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ரமேஷ் காயத்ரி, கணக்காளர் எஸ்.சுந்தரலிங்கம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன், நிருவாக உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Comments