ஏறாவூர் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினரால் வாழ்வாதாரக் கடனுதவிகள் வழங்கிவைப்பு.............

 ஏறாவூர் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினரால் வாழ்வாதாரக் கடனுதவிகள் வழங்கிவைப்பு.............

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினரால் ஐயன்கேணி விபுலானந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்துவர்களில் தெரிவு செய்யப்பட்ட 67 பயனாளிகளுக்கு வாழ்வாதார கடனாக சங்க நிதியினூடாக ரூபா 1,462,500.00 (பதினான்கு இலட்சத்து அறுபத்திரெண்டாயிரத்து ஐநூறு) சுழலும் கடன் திட்டத்தின் கீழ் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் அனுமதியின் கீழ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரன் மேற்பார்வையில் கிராம அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்றி ஹசனினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரிவிற்கான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டு கடனுதவிகளை வழங்கிவைத்தனர்.

Comments