களுவாஞ்சிகுடியில் கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு................

 களுவாஞ்சிகுடியில் கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு................

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு இன்று (15) திகதி மாங்காடு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இவ்வேலைத்திட்டம் கிழக்கு மாகாண ஆளுனரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் கிழக்கு கரையோரங்களை தூய்மையாக பேணுதல் எனும் திட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதேச மக்களுடன் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடல் சார் சூழல் அதிகார சபை மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கரையோரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
மேலும் இந் நிகழ்வினை பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான யோ.நிசந்தராசன் மற்றும் ஆ. ஜெகரூபன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments