கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2024

 கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2024

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது இன்று (02.02.2024) திகதி 09.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜீ.அருணன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
மேலும் இதன் போது பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

Comments