ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியில் கௌரவிப்பு நிகழ்வு...............

ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியில் கௌரவிப்பு நிகழ்வு...............

மட்டக்களப்பு ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கி, 2023ம் ஆண்டு மூன்று கோடியே பதினொரு லட்சம் ரூபாவை இலாபம் ஈட்டிய நிலையில், அதற்காக உழைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சமுர்த்தி சிரேஸ்ட தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.பஷீர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் கலந்து கொண்டார்.

அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர்  எம்.ஏ.சி.றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.தாஹிர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கி 2022ம் ஆண்டு நாட்பது லட்சம் ரூபா நஸ்டத்தில் இருந்த போதும், 2023ம் ஆண்டு மூன்று கோடி பதினொரு லட்சம் ரூபா தேறிய இலாபமாக பெற்றுள்ளது.

சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களது கடின உழைப்பே இதற்கு காரணம் என பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கட்டுப்பாட்டு சபை உத்தியோகத்தர்கள் அனைவரும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Comments