ஓந்தாச்சிமட - கோட்டைக்கல்லாறு ஆற்றில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு.............

 ஓந்தாச்சிமட - கோட்டைக்கல்லாறு ஆற்றில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு.............

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தோணி கவிழ்ந்து காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் 13 ஆம் திகதி இளைஞர் ஒருவர் தோணியில் வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலை வெள்ள நீரில் இழுத்துச்செல்லப்பட்டபோது தோணி கவிழ்ந்துள்ளது.

இதன் போது நீரில் குறித்த இளைஞன் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டு கல்வி கற்கும் கோட்டைக்கல்லாறை சேர்ந்த 25 வயதுடைய சுசிதரன் தனூஷன் என்ற மாணவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக பெரியகல்லாறில் முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞனின் சடலம் மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Comments