ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தலத்தில் சூரிய பகவானுக்கு நன்றி திருப்பலி.............

ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தலத்தில் சூரிய பகவானுக்கு நன்றி திருப்பலி.............

உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம் உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் பண்பாட்டு திருப்பலி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பாரம்பரிய கலாசார முறையில் இன்று (15) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது.
உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு, ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தலத்தில் திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட் அடிகளார் அவர்களினால் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்று இடம்பெற்ற பண்பாட்டு திருப்பலியில் நாட்டில் மதங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு ஆசிவேண்டி இவ்விசேட பொங்கல் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்விசேட திருப்பலியில் இறை விசுவாசிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments