மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து............

 மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து............

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துச் சம்பவித்துள்ளது

(07) மாலை மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிபயணித்த பேரூந்தும், கல்முனை இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த கனரக வாகனமும் நேருக்குநேர் மோதியுள்ளது.

பேருந்திலிருந்த சில பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். கனரகவாகத்தில் பயணித்த சாரதி காயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments