நிர்மான துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு மட்டக்களப்பில் கெளரவம்...............

 நிர்மான துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு மட்டக்களப்பில் கெளரவம்...............

தேசிய நீர்மான சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் மற்றும் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
தேசிய நீர்மான சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் தேசமானி ரஞ்சித மூர்த்தி தலைமையில் அஞ்சனா மண்டபத்தில் (20)ம் திகதி இடம் பெற்ற இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் மற்றும் இலங்கை தேசிய நிர்மான சங்கத்தின் தலைவர் எம்.டரின்டன் போல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் நிர்மானத் துறையினை கட்டியெழுப்புதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் அதிதிகளினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன் போது மாவட்டத்தின் இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் திணைக்களம் சார் உயர் அதிகாரிகள், பொறியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், அரச ஒப்பந்தகாரர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

Comments