ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் இரத்ததான நிகழ்வு.....

 ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் இரத்ததான நிகழ்வு.....

ஆரையம்பதி, ஆரையூர் விளையாட்டுக்கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்த தான முகாமானது (25) வியாழக்கிழமை மட்/ஆரையம்பதி இ.கி.மி. மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது.

 மேற்படி இரத்ததான முகாமின் ஆரம்ப நிகல்வானது கழகத்தலைவர் பாலேந்திரன் பாணுபாரதி தலைமையில் இடம்பெற்றதுடன், இவ்  நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்ஷண  கௌரி டினேஷ், மாவட்ட இரத்த வங்கி வைத்தியர் Dr.மு.விவேகானந்தநாதன், ஆரையம்பதி இ/கி/மி/ மகாவித்தியாலய அதிபர் S.ரவிச்சந்திரன், ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய உதவி குரு உமாபதசர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேற்படி இரத்த தான முகாமில் ஆரையூர் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேற்படி இரத்ததான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Comments