மண்முனை வடக்கு பிரதேச செயலக பொங்கல் விழா ............

 மண்முனை வடக்கு பிரதேச செயலக பொங்கல் விழா ............

மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில்  பொங்கல் விழா மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

உதவி பிரதேச செயலாளர்களான  லக்ஷனியாக பிரசாந்தன் மற்றும் சியாவுல் ஹக் ஆகியோரும்  விழாவில் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில்  பிரதேச செயலகத்தில் செயல்படும்  ஒன்பது      கிளைக்குமென தனித்தனி பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு அக்கிளைகளில் பணி புரியும் உத்தியோகத்தவர்களால் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டமை   குறிப்பிடத்தக்கது.

பொங்கல் விழாவில் நடனம், பாடல் என பல்வேறு நிகழ்வுகளும் கலாச்சார பிரிவினரால்  நடத்தப்பட்டன. செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










 


Comments