கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் தமிழோடு விளையாடு பாகம் இரண்டு............

 கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் தமிழோடு விளையாடு பாகம் இரண்டு............

மட்டக்களப்பில் தமிழோடு விளையாடு நிகழ்வானது வாகை அம்மையாரின் தலைமையில் ஆணி வேர் சிறுதானிய உற்பத்திகளும் தமிழ் ஒபேரா நிருவனத்தின் ஏற்பாட்டில் கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் 25 அன்று   இடம் பெற்றது.

மக்களிடையே கலப்பற்ற தூய தமிழில் உரையாடுவதை  மேம்படுத்தும் நோக்கில் தமிழோடு விளையாடு நிகழ்வு இடம் பெற்றது. சிறுவர்களிடையே வேற்று மொழி கலப்பின்றி செந்தமிழில் உரையாடுவதை  ஊக்கப்படுத்தும் முகமாக தமிழோடு விளையாடு நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தனர். இவ் நிகழ்வானது வாரம் தோறும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது . தற்போது இரண்டாவது பாகமாக கல்லடி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.

உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களான  ஆணிவேர் சிறுதானிய உணவு உற்பத்தி நிலையத்தினால் பாரம்பரிய ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Comments