செங்கலடியில், வெடி காயங்களுக்குள்ளான யானைக்கு சிகிச்சை...................

செங்கலடியில், வெடி காயங்களுக்குள்ளான யானைக்கு சிகிச்சை...................

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மரப்பாலம் இராஜபுரம் பகுதியில், காட்டு யானை ஒன்று காயங்களுடன் உயிருக்கு போராடிவரும் நிலையில் சிகிச்சை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று அதிகாலை இராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றினுள் யானை வீழ்ந்து கிடந்துள்ளது. அவ் இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி சுரேஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் யானையினை நேரில் பார்வையிட்டதுடன், யானையின் சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர்களுக்கும் அறிவித்தல் வழங்கினர்.

உணவு உற்கொள்ள முடியாது தவிக்கும் யானையினை பிரதேச வாசிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். யானையின் வாய்ப்பகுதி மற்றும் உடல் பகுதிகளில் வெடி காயங்களை அவதானிக்க முடிகிறது.


Comments