மட்டக்களப்பு கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...............

 மட்டக்களப்பு கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...............



மட்டக்களப்பு பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையை 14 நாட்கள் மூடுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை, தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கையடுத்து எதிர்வரும் 8ம் திகதி வரைக்கும் தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நீதவான் உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில், த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகிய  பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை, போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

பல ஹோட்டல்களில் மனித பாவனைக்கு உதவாத பல பொருட்களை மீட்டு அழித்ததுடன் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments