வவுனியாவில் இருந்து மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்திய வியாபாரிகள் உட்பட வாங்க சென்ற வியாபாரிகள் கைது..........

 வவுனியாவில் இருந்து மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்திய வியாபாரிகள் உட்பட வாங்க சென்ற வியாபாரிகள் கைது..........

மோட்டார் சைக்கிளில் வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிக்கு 845 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற வியாபாரிகளிடம், கஞ்சா வாங்க சென்ற வியாபாரிகள் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை களுவாஞ்சிக்குடியில் வைத்து (23) கைது செய்ததுடன், ஒரு மோட்டார்சைக்கிள், ஒரு முச்சக்கரவண்டி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலாக குழுவினர் களுவாஞ்சிக்குடி கடற்கரையில் சம்பவதினமான திங்கட்கிழமை (22) மாலை கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது அந்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு வியாபாரிகள் சென்று காத்துக் கொண்டிருந்த நிலையில், வவுனியாவில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை கடத்தி வந்த இருவர் காத்திருந்த வியாபரிகளிடம் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை கண்காணிப்பில் மாறு வேடத்தில் இருந்த பொலிசார் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து 4 பேரை கைது செய்ததுடன், 845 கிராம் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்று என்பவற்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Comments