போரதீவுப்பற்றில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.............

போரதீவுப்பற்றில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.............


மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், 2023.12.31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அகிலன் பவுண்டேசனின் அனுரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேசசெயலக உதவிப் பிரதேச செயலாளர் துலாஞ்சனன், இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் பணிப்பாளரும் போரதீவுப்பற்று பிரதேச மரணவிசாரனை அதிகாரியுமான வீ.ஆர்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாற்றுத் திறனாளிகளால் கவிதை, நாடகம், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளை கௌரவித்து அவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் மரக்கன்றுகள் குடைகள் என்பன வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு முழு அனுசரணை வழங்கிய அகிலன் பவுண்டேசன் மற்றும் கிராம உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு பிரதேச செயலகத்தினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments