மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் ஒளி விழா நிகழ்வு......

 மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் ஒளி விழா நிகழ்வு......

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் ஒளி விழா நிகழ்வு (26) திகதி மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் இடம்பெற்றது.
நிறுவனத்தின் தலைவர் து.தேவரதர்ஷன் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு ஆசிர்வாத ஆராதனையினை தாண்டவன்வன்வெளி தேவாலயத்தைச் சேர்ந்த திருச்சிலுவை பணியாளரான அருட் சகோதரி பிரேமிலா அவர்கள் நடத்தினார்கள்.
தாண்டவன்வெளி தேவாலயத்தைச் சேர்ந்த திருச்சிலுவை பணியாளரான வாமினி உதயநிதி அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
இவ்விழாவிற்கு விருந்தினர்களாக இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் போஷகர் சே.செல்வராஜா, Diva Home Designer உரிமையாளர் திவாகரன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் பிரியகாந்த் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட செவிப்புலனற்றோருக்கான நிறுவனத்தின் தலைவர் ஜே.சதானந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழாவில் பாடசாலை செல்லும் செவிப்புலனற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இக் கற்றல் உபகரணங்களை நன்கொடையாக வர்த்தகர்கள் அரச/அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் நலன் விரும்பிகள் ஆகியோர் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments