மட்டக்களப்பில் குளங்களின் நீர் மட்டம் உயர்வு.............

 மட்டக்களப்பில் குளங்களின் நீர் மட்டம் உயர்வு.............

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்கிணங்க உன்னிச்சைக் குளத்தில் 31.3 அடி, உறுகாமம் குளத்தில் 15.11அடி நீர்மட்டம் அதிகரித்து வான் கதவு திறக்கப்பட்டு அவற்றிலிருந்து மேலதிக நீர் வெளியேறுகின்றது.
வாகனேரி குளத்தில் 17.1அடி, கட்டுமுறிவு குளத்தின் 11.9அடியும், வெலிக்காக்கண்டிய குளத்தில் 16அடி 5அங்குலம் என நீர் மட்டம் அதிகரித்து 12அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.
மேலும் வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12.10அடி, கித்துள்வெவ குளத்தில் 7அடியும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
புணானை அணைக்கட்டு 5.5அடி, வடமுனை 12.10அடி வெளிகஹாகண்டிய 15.5 அடி, தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16.6 அடி, நவகிரிக் குளத்தின் 30.7 அக்குளத்தில் 2 வான்கதவுகள் 2.5 உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைப் பகுதியில் 6.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 3.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 13.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 9.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 33 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 46 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமையினால் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
அதனால் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் அன்றாட நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments