மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் பிள்ளைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.............

 மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் பிள்ளைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.............

 இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கியம் அமைப்பின் ஏற்பாட்டிற்கமைய சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலை ஐக்கியம் பணிமனையில் கிழக்கு மாகாண தலைவர் போதகர் எஸ்.தயாசீலன் தலைமையில் (27) நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன், மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச்சங்க தலைவர் பேரின்பராஜா சடாற்சரராஜா, சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளின் குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெருமதியான பாடசாலை உபகரணங்கள்  பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments