ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கணிணி அன்பளிப்பு....

 ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கணிணி அன்பளிப்பு....

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலையில் உள்ள பின்தங்கிய பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பினால் கணிணி இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது. 

ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது வவுணதீவு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலையாகவுள்ள நிலையில் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் வலய கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் திவாகரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த கணிணி வழங்கப்பட்டன.கணிணியைக் கையளிக்கும் நிகழ்வு,  பாடசாலை அதிபர் து.வித்தியாதரன் தலைமையில் நடைபெற்றது.

சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் க.துரைநாயகம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்.திவாகரன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை தலைவர் மு.விமலநாதன், செயலாளர் ரொமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்ட னர்

Comments