சிவானந்தா தேசிய பாடசாலையில் இலவச கண் வைத்தியமுகாம்........

 சிவானந்தா தேசிய பாடசாலையில் இலவச கண் வைத்தியமுகாம்........

 மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில்  (10)  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு கல்வி கற்று கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவ ஒன்றியம் கல்லடிப் பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மற்றும் அதனுடன் சார்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கையிலும் பங்களிப்பு செய்து வருகின்றது.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகளும், கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சிறிகரநாதன் தலைமையிலான வைத்திய குழுவினரினால் தரம் இரண்டு மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில்  2023 ஆம் ஆண்டுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவ ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சிறிகரநாதன் தலைமையில் மட்டக்களப்பபு  சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனையினை மேற்கொண்டிருந்தனர்.







Comments