அரச உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பயிற்சி வகுப்பு.....

 அரச உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பயிற்சி வகுப்பு.....

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 வகுப்புடைய அலுவலகர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டலில் இருந்து விடுவிப்பதற்கான பாடநெறிப் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பாடநெறி தொடர்பான பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் (06) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 10 நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த பயிற்சி செயலமர்வானது (06) முதல் தொடர்ச்சியாக 10 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments