மட்டக்களப்பு பிரதேச பிரதம மின்பொறியியலாளர் காரியாலயத்தின் இரத்ததான நிகழ்வு.....

 மட்டக்களப்பு பிரதேச பிரதம மின்பொறியியலாளர் காரியாலயத்தின் இரத்ததான நிகழ்வு.....

மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் காரியாலய ஊழியர்களினால் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (23) நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் காரியாலயத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக செயற்பாட்டின் ஓரங்கமாக,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர்களது வேண்டுகோளுக்கு அமைய இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண குடிசார் பொறியியலாளர் எம்.ரமண சுந்தரனின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் வி.வரோதயன் தலைமையில் இரத்தான முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாணத்தூக்கான மேலதிக பிரதிப் பொது முகாமையாளர் டபிள்யு.எல்.எஸ்.கே. விஜேதுங்கவும் இரத்தான முகாமில் கலந்துகொண்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் குருதி மாதிரிகளைச் சேகரித்தனர்.










Comments