மட்டு மாவட்ட சமுர்த்தி வங்கி கணனி மயமாக்கல்....

மட்டு மாவட்ட சமுர்த்தி வங்கி கணனி மயமாக்கல்....
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கல் ஊடாக கணக்கு நடவடிக்கையை நடாத்தி செல்லுதல் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் செயல்பாட்டை துரிதப்படுத்துவதற்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட  செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில்10ம் திகதியாகிய இன்று நடைபெற்றது.
சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கல் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான இச்செயலமர்வை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி வங்கிகளின் கணனி பிரிவுக்கான தொழில் நுட்ப  உத்தியோகத்தரான T.பவளேந்திரன் அவர்களால் முன்னேடுக்கப்பட்டது.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், வங்கி சங்க முகாமையிளர்கள், கணக்காய்வு உத்தியோகத்தர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் A+ தொழில் நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றி இருந்தனர்.
இத்துடன் இச்செயலமர்வில் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் மற்றும் மாவட்ட செயலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் JF.மனோகிதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டானர்.







Comments