மட்டக்களப்பு 93 நண்பர்களால் உலர் உணவு வழங்கி வைப்பு...

மட்டக்களப்பு 93 நண்பர்களால் உலர் உணவு வழங்கி வைப்பு...
தீபாவளி  திருநாளை முன்னிட்டு சீங்கப்பூர் வாழ் இலங்கை நண்பர்களின் உதவியுடன் மட்டக்களப்பு 93 நண்பர்களால் வவுனதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காந்தி நகர் கிராமத்தில் வசிக்கும் 100 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் (09) அன்ற வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு உலர் உணவுகளை வழங்கி வைத்தார்.
 மட்டக்களப்பு 93 நண்பர்கள் கடந்த காலங்களில் கிரான் மற்றும் வவுனதீவு பிரதேச செயலகங்களில் காணப்படும் பின்தங்கிய கிராமங்களில் வாழும்  மக்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுகளை வழங்கி வந்துள்ளத குறிப்பிடத்தக்க விடயமாகும். 









Comments