கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கலை இலக்கியத் திறன் அறிவுப் போட்டி - 2023

 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கலை இலக்கியத் திறன் அறிவுப் போட்டி - 2023 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2023ம் ஆண்டுக்கான கலை மன்றங்களுக்கு  இடையேயான  கலை இலக்கியத் திறன் அறிவுப் போட்டியில் அக்கரைப்பற்று ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம்  முதலிடத்தைப்  பெற்றுக்கொண்டது. 

'ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் முதல் சுற்றுத் தொடக்கம் ஏழு சுற்றுக்களிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தெரிவானது. இதில் வெற்றி பெற்று முதல் இடத்தினைத் தனதாக்கிக் கொண்டது. 

இந்நிகழ்வானது  களுதாவளை மகா வித்தியாலயத்தில் இரு நாட்களாக 28,29ம் திகதிகளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்  சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் நடுவர்களாக  எழுத்தாளர்  உமா வரதராஜன், கவிஞர் மன்சூர் ஏ.காதர் ஆகியோர் கடமையாற்றினர்.

மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில்  கலந்து சிறப்பித்தனர். 

இதன் முதல் சுற்று கடந்த செப்டம்பர் மாதம்  'இலக்கிய அறிவுசார் திறன்' எழுத்து மூலமான வினாவிடை போட்டியாக நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட மன்றங்களில் 180 கலை மன்றங்கள் பரீட்சை எழுதின

இப்போட்டிகள் பத்து தலைப்புக்கள் உள்ளடங்கலாக வகுக்கப்பட்டிருந்தன: 

  • 1. தமிழ் இலக்கியம்
  • 2. மேலைத்தய  இலக்கியம்
  • 3.  கலை பண்பாடு
  • 4.  உள்ளூர் சினிமா
  • 5.  உலக சினிமா
  • 6.  கிராமிய கலைகள்
  • 7.  நாட்டார் கலைகள்
  • 8.  கவின் கலைகள்
  • 9.  பன்பாட்டு நூல்கள்
  • 10. மற்றும் சகல கலை இலக்கியங்கள்

இப்போட்டிகள் யாவும் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மொழி மூலமாக, பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்து செயற்பட்டுக்கொண்டிருகின்ற கலை இலக்கிய மன்றங்களை வலுவூட்டும் நோக்கத்துடனும், அவர்களை திறமையாக  இயங்கச் செய்வதற்குமான  நோக்கத்துடனும் கலை இலக்கிய அறிவினை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. 

இப்போட்டிகளுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர்கள் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன.






Comments