இலங்கையர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு!

 இலங்கையர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு!

ஜனவரி முதல் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலம் குறித்த சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க அறிவித்து பின்னர் அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இதன் மூலம், ஜனவரி முதல் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு கிடைக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

Comments