மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் விழிப்புணர்வு.......

 மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் விழிப்புணர்வு.......

நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை தியாவட்டவான் பிரிவில் பல வேலைத்திட்டங்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கிணங்க சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவின் சட்ட விரோத மதுப்பாவனை தொடர்பான இடங்கள், பிரதேச மக்கள் ஒன்றுகூடும் பகுதிகளில் மது ஒழிப்பு தொடர்பான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டு, துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு நிகழ்வும் நடாத்தப்பட்டது.
போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் எம்.அன்வர் சாதாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





Comments