கொக்கட்டிச்சோலையில வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடி.............

கொக்கட்டிச்சோலையில வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடி.............

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்பாக, கொடுத்த பணத்தினை பெற்றுத் தருமாறு கோரி ஒன்றுகூடிய வேளை அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அரசாங்கத்தினால் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என கூறி, தாய்லாந்து, டென்மார்க் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் அனுப்புகின்றோம் என 188 நபர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், இன்றைய தினம் குறித்த மூன்று முகவர்களும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த முகவர்களாக செயற்பட்டவர்களின் ஒருவர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments