நாவலடி கடற்கரையிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு...............

நாவலடி கடற்கரையிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு...............

மட்டக்களப்பு, நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருவேப்பங்கேணியை வசிப்பிடமாக கொண்ட 89 வயதுடைய உ.விஜயரத்ன என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவலடிப் பகுதியில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு நேற்றைய (30) தினம் வருகை தந்த முதியவர் பின்னர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரி த.தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரதே பரிசோதனைகளின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிசாரிற்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments