மட்டக்களப்பில் பிணக்குகளை கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு......

 மட்டக்களப்பில் பிணக்குகளை கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு......

பிணக்குகளை கையாளுதல் மற்றும் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சியாஹூல் ஹக் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (18) திகதி இடம் பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மண்முனை வடக்கு மத்தியஸ்த சபை ஆகியன இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்த இந்நிகழ்வானது "எமது பிணக்குகளை மத்தியஸ்தம் ஊடாகத் தீர்த்துக்கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் இடம் பெற்றது.
மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் பயிற்றுனருக்கான பயிற்றுவிப்பாளர் துரைசாமி நகுலோஸ்வரனினால் சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
மேலும் சமூகத்தில் காணப்படும் நடைமுறைப் பிணக்குகளை நடுநிலையாக கையாளுதல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மக்கள் மத்தியில் காணப்படும் சிவில் பிணக்குகளை நீதிமன்றத்திற்கு செல்லாமல் மத்தியஸ்தம் மூலம் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பை விரிவுபடுத்துவற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் இங்கு காட்சிப்படுத்துகைகள் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு மத்தியஸ்த சபை தவிசாளர் எஸ்.விஷ்ணுமூர்த்தி, மண்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், இளைஞர் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Comments